
கடந்த27/08/2025 அன்று தொடங்கிய விநாயகர் சதுர்த்தி விழா
இந்து முன்னணி சார்பில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு மாபெரும் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் 29/08/2025 காலை 1.30 மணி அளவில் திண்டிவனம் செஞ்சி சாலை அங்காளம்மன் கோவில் அருகில் இருந்து மேளதாள இசையுடன் திண்டிவனம் மேம்பாலம் வரை நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வாகனங்களோடு வரிசையாக அணிவகுத்து ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை விநாயகர் சதுர்த்தி விழா குழு தலைவர் கே.பிரபு தலைமையில், சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி புதுவை மாநில செயலாளர் மணிவண்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார், மேலும் சிறப்பு அழைப்பாளராக கே.ஆர்.எஸ்.பில்டர்ஸ் குழுமம் தொழிலதிபர் சுப்பிராயுலு , செஞ்சி வி.பி.என் குழுமம் தலைவர் தொழிலதிபர் வி.பி.என் கோபிநாத் கலந்து கொண்டு விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தனர் இந்நிகழ்ச்சிக்கு பாஜக மாவட்ட தலைவர் கே.ஆர்.விநாயகம், பாட்டாளி மக்கள் கட்சி விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜ்,ஆசிரியர் ஏழுமலை, செந்தில்குமார் துரைசோழன், விழா பகுதி பொறுப்பாளர் வி .பி .எஸ் மணிபாலன், ஐயப்பன், நகர தலைவர் வெங்கடேச பெருமாள், பாமக நகரத் தலைவர் சௌந்தர்,ராதிகா, டி .என் .கே .பிரபு, கலை நிதியா, பிரபாகரன், பாபு ராஜாராம், வெல்டிங் பாலாஜி, இளைஞர் அணி மாநில செயலாளர் தினேஷ் குமார், எத்திராஜ். சந்திரன்,வழக்கறிஞர் ரஜினிகாந்த், ,கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு திண்டிவனம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு திண்டிவனம் தாலுகா அலுவலகம் சந்திப்பில் பக்தர்களுக்கு நீர்மோர் மற்றும் குடிநீரை வழங்கினர். மேலும் விநாயகர் சிலைகளுடன் வாகனங்கள் ஊர்வலமாக மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கைப்பாணி குப்பம் கடலில் கோட்டகுப்பம் துணை கண்காணிப்பாளர் தேவி, திண்டிவனம் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்களின் தலைமையில் காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பாக விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது.