
திண்டிவனம் மேம்பால பக்க சுவற்றில் உரசி நின்ற அரசு பேருந்து
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காலை சுமார்9.45 மணி அளவில் (208) வெள்ளி மேடு பேட்டை, வீரனாமூர், வயலாமூர், மார்க்கமாக சென்று மீண்டும் திண்டிவனம் பழைய இந்திரா காந்தி பேருந்து நிலையத்திற்கு வழக்கமாக வரும் அரசு பேருந்து மருத்துவர் ராமதாஸ் மருத்துவமனை மேம்பாலத்தின் பக்க சாலை வழியாக வருவது வழக்கம் இந்த சாலை வழியாக எதிர்ப்புறமாக இரு சக்கர வாகனங்களும் ஆட்டோக்களும் வருவதும் வழக்கம் அதுபோல அரசு பேருந்து வரும்போது எதிர் புறத்தில் வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்தை பக்கவாட்டில் ஒதுங்கி ஓட்ட முயற்சித்த போது மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவற்றில் உரசியபடி அரசு பேருந்து நின்றது இதனை அறிந்த திண்டிவனம் டெப்போ அதிகாரிகள், ஓட்டுநர்கள் மேம்பால சுவற்றில் உரசி இருந்த அரசு பேருந்தை மீட்டனர். இந்தப் பகுதியில் மருத்துவமனைகள் இந்தியன் வங்கி இருப்பதனால் இருசக்கர வாகனங்கள் பெருமளவு சாலையிலேயே நிறுத்தப்படுகின்றன இந்தப் பாதை குறுகிய முக்கிய பாதை என்பதால் பேருந்து ஓட்டுநர்கள் மிகுந்த சிரமத்துடனே இந்த சாலையில் பேருந்தை இயக்குகின்றனர். மேலும் இந்த சாலையின் முடிவில் பழக்கடை பூக்கடை போன்றவற்றால் பேருந்தைதி ரும்புவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். அரசு பேருந்து மேம்பால பக்க சுவற்றில் உரசி நின்ற காரணத்தினால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டு அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காட்சியளித்தது.