மயலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அவ்வையார் குப்பம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்.

0
23

விழுப்புரம் மாவட்டம், மயிலம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அவ்வையார்குப்பத்தில் நடந்த “உங்களுடன் ஸ்டாலின் ” திட்ட முகாமை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் துவக்கி வைத்தார்.

இந்த முகாமில் அவ்வையார்குப்பம், ஆலகிராம், டி. கேணிப்பட்டு ஆகிய கிராமப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மகளிர் உரிமைத்தொகை, கலைஞர் காப்பீட்டு அட்டை, ஆதார் புதுப்பித்தல், மருத்துவ பரிசோதனைகள், வேளாண்துறை சார்ந்த கோரிக்கைகள், பட்டா மாற்றம், மின் இணைப்பு மாற்றம், குடும்ப அட்டை பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட அரசு சார்ந்த அனைத்து துறைகளிலும் பொதுமக்களின் குறைகள் மனுக்களாக பெறப்பட்டது.

முகாமில் மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் வரவேற்றார்.

செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். மஸ்தான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் மாசிலாமணி, வழக்கறிஞர் சேதுநாதன், மாநிலத் தீர்மானக் குழு உறுப்பினர் செஞ்சி சிவா, ஆகியோர் முகாம் குறித்து விளக்கி பேசினர்.
முகாமில் மயிலம் ஒன்றிய செயலாளர் மணிமாறன், ஆலகிராமம் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் கண்ணன், சந்திரன், மணிபாலன், சந்திரசேகர், நிர்மல் குமார், டி.கேணிப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி ஜெய்சங்கர், கார்த்தி, செந்தில்குமார், முனியப்பன், முத்து, அவ்வையார் குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி, ஒன்றி கவுன்சிலர் ஜெயந்தி, மாவட்ட கவுன்சிலர் மகேஸ்வரி குமரேசன்,
தீவனூர் சேகர், வெங்கந்தூர் சேகர், நடுவனந்தல் சேகர், நானல்மேடு பாஸ்கர், ஆசூர் பிரபு, உதயவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் சுகாதாரத் துறை சார்பில் மக்களை தேடி மருத்துவப் பெட்டகம், கருவுற்ற தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் ஆகியவற்றை வழங்கினார்.

மயிலம் ஊராட்சி ஒன்றியத்தில் இதுவரை நடந்த ஒன்பது முகாம்களில் 8 ஆயிரத்து 365 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு அந்தந்த துறையினருக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here